தென்னிந்திய திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய “லியோ” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய த்ரிஷா குறித்து தரக்குறைவாக பேசினார். இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், த்ரிஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுவரை நடிகர் சங்கத்தில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் மன்சூர் அலிகான் த்ரிஷாவை அவமதிக்கவில்லை என்றும், அவரிடம் விளக்கம் கேட்காமல் நடிகர் சங்கம் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது தவிர த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நேற்று தெளிவாக கூறியிருந்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் பேசியது மற்றும் நடந்து கொண்டது என்ற குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.