ரூ.50 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை..!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 அதிகரித்து வரலாறு காணாத வகையில் ரூ.50,000ஐ எட்டியது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப ஆபரணத் தங்கத்தின் விலை தினமும் மாறுகிறது. பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது தங்கத்தின் விலை உயரும்.

 

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று ரூ.280 உயர்ந்து வரலாறு காணாத வகையில் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி பார் கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.80,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
 
Exit mobile version