போரில் 43 ஆயிரம் வீரர்களை இழந்தோம், எங்களுக்கு அமைதி தேவை: ஜெலென்ஸ்கி

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் 43 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் இன்னும் நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் 43 ஆயிரம் ராணுவ வீரர்களை இழந்துள்ளனர் என்றார். 3.70 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்தனர். சமீபத்தில் டொனால்ட் ட்ரம்பை சந்தித்த ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லாத வகையில் அமைதி ஒப்பந்தம் அவசியம் என வலியுறுத்தினார்.

இதன்போது அவர் பேசுகையில், “அமைதியை சீர்குலைக்க ரஷ்யா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாங்கள் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை விரும்புகிறோம் என்று டிரம்பிடம் கூறினேன். ரஷ்யா கடந்த காலங்களில் பலமுறை செய்துள்ளதைப் போல, இந்த ஒப்பந்தம் அதன் அமைதிக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நேச நாடுகள் பாராமுகமாக இருக்கக் கூடாது. நீண்ட கால அமைதியைக் கொண்டுவரும் உடன்படிக்கைக்கு நாங்கள் உடன்படுவோம்” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!