இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்குலு மாகாணத்தில் நேற்று (ஜனவரி 14) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.