Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

உலகம்

லிபியாவில் கடும் வெள்ளத்தால் 6 ஆயிரம் பேர் உயிரிழப்பு!!

Libya floods

லிபியாவில் புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த வாரம் மத்தியதரைக் கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடலைத் தாக்கியது. இந்த புயல் செப்டம்பர் 10 அன்று லிபியாவின் பெங்காசியை அடைந்தது. மணிக்கு 165 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் லிபியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement. Scroll to continue reading.

இந்த கனமழை காரணமாக டெர்னாவில் இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் மக்களின் வீடுகள், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்தது. டெர்னா பகுதியில் மட்டும் 5000 பேர் உயிரிழந்தனர். 20000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெங்காய் கடற்கரைப் பகுதியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், சாலைகள், பாலங்கள், வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். லிபியாவில் வெள்ளம் காரணமாக இதுவரை 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement. Scroll to continue reading.

லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெரெக் அல் ஹராஸ் கூறுகையில், “டெர்னாவில் மட்டும் 5200 பேர் உயிரிழந்துள்ளனர். 20000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். வரும் நாட்களில் உயிர் இழப்புகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = eight

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: