Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

உலகம்

சீனாவில் கடும் பனிமூட்டம்.. சாலை விபத்தில் 17 பேர் பலி..!

images 13

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் கவுண்டியில் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement. Scroll to continue reading.

இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

china accident

விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நான்சாங் மாவட்ட போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அடர் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement. Scroll to continue reading.

பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டாம், எந்த சூழ்நிலையிலும் வாகனங்களை முந்திச் செல்ல முயற்சிக்க வேண்டாம், வாகனங்களுக்கு இடையே இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety − = 86

You May Also Like

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 30, 2023): சோபகிருது – புரட்டாசி 13 – சனி – தேய்பிறை நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 7.45-8.45 AM மாலை: 4.45-5.45...

இந்தியா

கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...

தமிழ்நாடு

சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை ரூ.44 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட...

இந்தியா

இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...

Advertisement
       
error: