தேவையான பொருட்கள் :
- முட்டை – 4
- கொத்தமல்லி இலை – 2 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கரம்மஸாலாத்தூள் – அரை தேக்கரண்டி
- சீரகம் – 2 தேக்கரண்டி
- தக்காளி – 2
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
முட்டையை உடைத்து ஊற்றி, உப்புத்தூள், மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் இறக்கி, முட்டைக் கலவையுடன் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து காய்ந்ததும் முட்டைக் கலவையில் சிறிதளவு எடுத்து, பரவலாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.
திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.