தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் பறக்கும் வெப்பம் இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் வெப்பச் சலனம் தொடங்கியுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் சில இடங்களில் வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version