தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகனும், செங்கல்பட்டு ஆட்சியராக ஏ.கே.கமல் கிஷோர், மதுரை ஆட்சியராக எம்.எஸ்.சங்கீதா, கடலூர் ஆட்சியராக அருண் தம்புராஜ், நாமக்கல் ஆட்சியராக எஸ். உமா மற்றும் தூத்துக்குடி ஆட்சியராக ஏ.ஆர்.ரகுல்நாத் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேகப், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சராயு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்னு சந்திரன், ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா, மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று ஏராளமான துறைகளின் தலைமை நிர்வாகிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
