தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை உள்பட, 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

 
 
Exit mobile version