
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஜன.21) முதல் வரும் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.