தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது” என்றார்.