Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

ஆவின் வெண்ணெய் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

images 57

தமிழக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் மக்களுக்கு நாள்தோறும் தடையில்லா பால் விற்பனையை செய்து வருகிறது. ஆவின் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் பாலானது உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இவை சத்துகளின் அடிப்படையில் ஆரஞ்சு, நீலம், பச்சை, பழுப்பு உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டர் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆவின் வெண்ணை விலை உயர்ந்துள்ளது.

Advertisement. Scroll to continue reading.

அதன்படி 500 கிராம் வெண்ணை ரூ.250ல் இருந்து ரூ. 260 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆவின் நெய் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஆவின் நிறுவன பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + = twelve

You May Also Like

ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, வேலைகள் சீராக நடக்க வேண்டும் என்றால் முதலில் குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிப்பதற்கும், உடலால் ஊட்டச்சத்துக்களை...

தமிழ்நாடு

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,Advertisement. Scroll...

இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...

தமிழ்நாடு

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக...

Advertisement
       
error: