சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

 

உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் போன்றவற்றை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, இளநிலைப் படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.150ல் இருந்து ரூ.250 ஆகவும், திட்டப் பணிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.450 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

 
 
 
Exit mobile version