அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசாக தமிழக அரசு அகவிலைப்படி சதவீதத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ஆசியர்கள் சமநிலை ஊதியத்திற்கு போராட்டம் செய்து வந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது 4% உயர்ந்து 38% ஆக உயர்ந்துள்ளது. அதுவும் இந்த புத்தாண்டு தினத்தன்று (இன்று) அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, புத்தாண்டு பரிசாக 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலை படி உயர்த்தப்பட்டதால் பயன்பெற்றுள்ளனர். இந்த வருடம் இதனை தொடக்கமாக எடுத்து மக்களுக்கு நற்பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.