எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்னத்தில் இருந்து 12 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக 2 படகுகளில் கடலுக்கு சென்றனர். அப்போது, நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் யாழ்பாணத்தில் உள்ள மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகிலும் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.