சென்னை: அரசு சான்றிதழ்களை பெற இன்று சிறப்பு முகாம்

 

சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.

குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் சான்றிதழ்கள், அரசு வழங்கும் சான்றிதழ்களை இழந்து தவித்து வருகின்றனர். இதனையடுத்து, அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று புயல் மற்றும் மழை காரணமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாமில் மக்கள் புயலால் இழந்த சான்றிதழ்களை மீண்டும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 46 இடங்களில் முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 
 
Exit mobile version