தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

 

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு மற்றும் 2ம் பருவத் தேர்வுகள் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நேற்று திங்கள் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளும் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02) திறக்கப்படுகின்றன.

இதற்கிடையில், மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளை பள்ளி அளவில் ஜனவரி 11-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
 
 
Exit mobile version