ரேசன் கடைகளில் இன்று முதல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கல்!!

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம், இன்று (ஜன. 10) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரூ.1000 ரொக்கம் அனைத்து ரேஷன் கார்டுதரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

 

இந்த அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (ஜன.10) முதல் தொடங்கப்பட்டுள்ளது. டோக்கன்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், ஜன. 13 ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 
 
Exit mobile version