தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் மளமளவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், தேனி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பிற்பகல் வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளது.

 
 
Exit mobile version