சென்னை உட்பட 4 மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

 

மிக்ஜம் புயல் எதிரொலியால் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் உள்ள குடியிருப்புகள், பள்ளி வளாகங்களில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கியுள்ளது. தற்போது வரை ஆங்காங்கே மழைநீர் வடியாமல் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் நிலைமை சீரானவுடன் அரையாண்டு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
Exit mobile version