Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் – காவல்துறை ஆணையர் மக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டாஸ் புயல் சென்னையில் இருந்து 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவல்துறை ஆணையர் மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement. Scroll to continue reading.

அத்துடன் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னேற்பாடு பணிகளும் வேகபடுத்தப்பட்டுள்ளது. இந்த மாண்டாஸ் புயல் இன்று இரவு அல்லது அதிகாலை நேரத்தில் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது காற்று 80 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும். அத்துடன் கன மழையும் பெய்யும் அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். அவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கும் படி காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty eight + = 98

You May Also Like

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 30, 2023): சோபகிருது – புரட்டாசி 13 – சனி – தேய்பிறை நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 7.45-8.45 AM மாலை: 4.45-5.45...

இந்தியா

கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...

தமிழ்நாடு

சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை ரூ.44 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட...

இந்தியா

இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...

Advertisement
       
error: