பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்!!

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 4) பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த தேர்வில் மாணவ மாணவியர்கள் மற்றும் சிறைவாசிகள், தனித் தேர்வர்கள் என 8,25,394 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

எனவே மாநிலம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள், 3,200 பறக்கும் படைகள், 46,700 தேர்வு கண்காணிப்பாளர் என பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. இன்று தொடங்கும் தேர்வு வருகிற 25ம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Exit mobile version