Thursday, December 7, 2023
Homeதமிழ்நாடுநாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் - பெட்ரோல் நிலைய...
- Advertisment -

நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் – பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

- Advertisement -

நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் வங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− five = three

- Advertisment -

Recent Posts

error: