சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இந்த வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

 
 
Exit mobile version