தமிழகத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும், “கலைஞர் மகளிர் திட்டம்”, செப்டம்பர், 15 முதல் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை https://kmutappeal.tnega.org/login.html என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த தளம் சமீபகாலமாக தொழில்நுட்ப கோளாறு சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 100% வேலை செய்வதாக கூறியுள்ளனர். எனவே விண்ணப்ப நிலையை அறிய ஆர்வமுள்ளவர்கள், “பொதுமக்கள் உள்நுழைவு” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.