தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 17 முதல் 19 வரை மதுக்கடைகள் மூடல்..!

 

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 17 முதல் 19 வரை மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

 

இந்த நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு வரை தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
 
Exit mobile version