குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7 ஆயிரத்து 301ல் இருந்து 10 ஆயிரத்து 117 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வி.ஏ.ஓ காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 274 இல் இருந்து 425 ஆக உயர்ந்துள்ளது. ஜூனியர் இன்ஜினியர், பில் கலெக்டர் ஆகிய பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்கள் 163 ல் இருந்து 252 ஆக அதிகரித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான பல்வேறு காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7 ஆயிரத்து 301 இல் இருந்து 10 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் தேர்வில் 18.5 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில் தற்போது வரை முடிவுகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.