Sunday, January 26, 2025

ரயில்வே பராமரிப்பு பணி.. இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து..!

- Advertisement -

சென்னை தாம்பரத்தில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை பல்லாவரம்-கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!