சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் : இந்த 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல‌ அனுமதி

 

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலில், மாதந்தோறும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நாளை மறுநாள் மே 5 ஆம் தேதி முதல் மே 8ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

 

மேலும் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல இருக்கும் பக்தர்கள், தடை செய்யப்பட்ட மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. அதேபோல் இரவில் தங்க அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

 
 
Exit mobile version