அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை வரும் 17ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஜேஎம் 1 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சவுக்கு சங்கர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த திமுக மகளிர் அணியினரும், பெண் வழக்கறிஞர்களும் சவுக்கு சங்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சவுக்கு சங்கர், தன் மீது போலி வழக்குப் பதிவு செய்யப்படுவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினார்.