அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டிப்பு

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

 

இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 11வது முறையாக டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
Exit mobile version