அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் தற்காலிக இடைநீக்கம் அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இந்த கல்வியாண்டில் எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது என்றும், அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடப்பிரிவுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு பெரும் எதிர்ப்புக்குப் பிறகு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.