ஆனி மாத அமாவாசை: சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி..!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி கோவிலுக்கு அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.

இந்நிலையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!