Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

தமிழ்நாடு

வட சென்னை பகுதியில் விளையாட்டு வளாகம் – ரூ. 9.70 கோடி நிதி ஒதுக்கீடு!!

images 2023 01 25T124808.610

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் விதமாக அரசு விளையாட்டு துறை சார்பாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று ‘முதல்வர் கோப்பை’ விளையாட்டு போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement. Scroll to continue reading.

ஏற்கனவே சட்டசபையில் அறிவித்த படி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்க இன்று ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் வாலிபால், பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, ஜிம் உள்ளிட்டவைகள் போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 35 = forty four

You May Also Like

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 30, 2023): சோபகிருது – புரட்டாசி 13 – சனி – தேய்பிறை நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 7.45-8.45 AM மாலை: 4.45-5.45...

இந்தியா

கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...

தமிழ்நாடு

சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை ரூ.44 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட...

இந்தியா

இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...

Advertisement
       
error: