பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு

 

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆவலுடன் தயாராகி வருகின்றனர். அதிலும் இம்முறை 13 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளதால் 12, 13 ஆகிய தினங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அரசு விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே 50 ஆயிரத்தைத் தாண்டிவிட்டன. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு நிரம்பியதால் மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 
 
 
Exit mobile version