புதுக்கோட்டை அருகே டீக்கடைக்குள் புகுந்த லாரி – 5 பேர் பலி..!

 

அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் நந்தன சமுத்திரம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

மேலும், அருகில் நின்றிருந்த கார் மற்றும் வேன் மீது பயங்கரமாக மோதியது. கார் மற்றும் வேனில் ஐயப்ப பக்தர்கள் இருந்துள்ளனர். டீக்கடையிலும் டீ குடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. லாரி மோதியதில் டீக்கடை மற்றும் வாகனத்தில் இருந்த 5 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
Exit mobile version