4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு

 

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

இதன் மூலம் 569 தமிழ் உதவிப் பேராசிரியர்கள், 656 ஆங்கில உதவிப் பேராசிரியர்கள், 318 கணிதம் உதவிப் பேராசிரியர்கள், 296 வணிகவியல் உதவிப் பேராசிரியர்கள் என 4,000 உதவிப் பேராசிரியர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

 
 
Exit mobile version