Thursday, December 7, 2023
Homeதமிழ்நாடுஅதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகள்.. 3 மாணவிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை..!
- Advertisment -

அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகள்.. 3 மாணவிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை..!

- Advertisement -

ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 6 ஆம் தேதி உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் போட்டி போட்டுக்கொண்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டனர். வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து 4 மாணவிகளும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

- Advertisement -

அதில் ஒரு மாணவி கல்லீரல் செயல் இழந்து சென்னை கொண்டு சென்றபோது வழியில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மூன்று மாணவிகளையும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighty two − = 81

- Advertisment -

Recent Posts

error: