ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

 

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

 
 
 
Exit mobile version