50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை ஒரு நாள் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளர். 15 பேர் கொண்ட இந்திய அணியில், சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகிய 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவிசந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன், சாஹல் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
