News

News

Wednesday
June, 7 2023

காயம் காரணமாக மற்றொரு வீரரும் IPL லிருந்து விலகல்..!

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், முதல் போட்டியே அனைத்து அணிகளும் விளையாடி முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிக ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியிலேயே, CSK அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் முழங்காலில் பலத்த காயம் அடைந்தார்.

இந்த காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இவரை தொடர்ந்து, RCB அணியின் ரஜத் படிதார் அகில்லெஸ் ஹீல்லில் காயம் அடைந்துள்ளார். இதனால், இவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக, RCB அணி நிர்வாகமானது தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read:  IND vs AUS WTC 2023: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!

இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியில் இருந்தும் காயம் காரணமாக வெளியேறி வருகின்றன. அதாவது, MI அணியில் இருந்து பும்ரா மற்றும் ஜே ரிச்சர்ட்சன், CSK அணியில் முகேஷ் சவுத்ரி மற்றும் ஜேமிசன், டெல்லி அணியில் ரிஷப் பண்ட், பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோவ், ராஜஸ்தான் அணியில் பிரசித் கிருஷ்ணா வெளியேறி உள்ளனர். தற்போது இந்த வரிசையில், குஜராத் அணியில் கேன் வில்லியம்சன், RCB அணியில் வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் இணைந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: