தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (ஏப்ரல் 25) நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதி வருகின்றனர்.
தேர்வுத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பள்ளிகளின் பரிந்துரையின்படி, வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் செய்முறைத் தேர்வு, நடப்பு ஆண்டில் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh