பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 489 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 66 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 30 ஆயிரத்து 489 நபர்களுக்கு நோய்கள் கண்டறியப்பட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்தார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh