தேவையான பொருட்கள்
கம்பு – 500 கிராம்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு கம்பை எடுத்துக்கொண்டு நன்கு நீரினில் கழுவ வேண்டும்.மேலும் கம்பை 3 அல்லது 4 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
உலர வைத்த கம்பை எடுத்து நறு நறு தன்மை வரும் அளவு லேசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் லேசாக அரைத்த கம்பையும் சேர்த்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு இதனை 15 நிமிடம் ஆர வைத்த பிறகு கம்பு சாதம் தயார் ஆகி விடும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh