காலிப்பணியிடங்கள்:
தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளியிட்ட அறிவிப்பில், Data Entry Operator பணிக்கு என்று மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NIA நிறுவனத்தில் வழக்கமான முறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.கூடுதல் தகுதி விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
வயது விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
ஊதிய விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசு ஊதிய அளவின் படி, மாதம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
தேர்வு முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு (Discussion) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து பயனடையலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh