தேசத் துரோக வழக்குச் சட்டப் பிரிவை மறுஆய்வு செய்து முடிக்கும் வரை அந்தப் பிரிவின்படி வழக்குப் பதியக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசத் துரோக வழக்கின் கீழ் நாடு முழுவதும் 13,000 பேர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேசத் துரோக சட்டப் பிரிவு 124 ஏ இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சட்டப்பிரிவு குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் எந்த வழக்கும் பதியக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh