#INDvsENG 2-வது டெஸ்ட்.. இந்தியா 249 ரன்கள் முன்னிலை..
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா சதமடித்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 195 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இந்தியா தனது பேட்டிங்கில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 25 ரன்கள் எடுத்துள்ளார். சப்மென் கில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஜேக்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனை தொடர்ந்து புஜ்ரா 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரண்டாம் நாள் ஆட்ட இறுதியில் இந்திய ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்தியா 249 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.