Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

இந்தியா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!!

parliament

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தலைமை தேர்தல் கமிஷனர் நியமன மசோதா உள்ளிட்ட நான்கு முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

4 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவும், புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு இடம் மாற்றவும், பார்லிமென்டின் சிறப்பு அமர்வு இன்று துவங்குகிறது. 18ம் தேதியில் இருந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைவரது கவனமும் குவிந்துள்ளது.

Advertisement. Scroll to continue reading.

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் முதல் அமர்வில், அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணத்தின் நினைவுகள் விவாதிக்கப்படும். இந்த அமர்வில், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, தபால் சேவை மசோதா, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன. ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா இம்முறை அறிமுகப்படுத்த போவதில்லை. அதேபோல், இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றும் மசோதாவும் இந்தத் தொடரில் அறிமுகப்படுத்த போவதில்லை.

இன்று நாடாளுமன்ற கூட்டம் பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. வடமாநிலங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் நாளை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + two =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: