சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் படு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், பிசிசிஐ ஆனது “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியா ஐகான்ஸ்” திட்டத்தின் கீழ் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு கோல்டன் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.
தேசிய பெருமையின் சின்னமாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன் உள்ளிட்டோருக்கு உலக கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார்.
The Phenomenon Beyond Cinema! 🎬
The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and… pic.twitter.com/IgOSTJTcHR
— BCCI (@BCCI) September 19, 2023
இதனை பிசிசிஐ ஆனது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
